நாட்டில் சமய வழிபாட்டு தலங்களை மீண்டும் திறப்பதற்கான திகதியை அரசாங்க தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது. இதற்கமைய ஜுன் 12ஆம் திகதி முதல் அனைத்த...
நாட்டில் சமய வழிபாட்டு தலங்களை மீண்டும் திறப்பதற்கான திகதியை அரசாங்க தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது.
இதற்கமைய ஜுன் 12ஆம் திகதி முதல் அனைத்து சமய வழிபாட்டு தலங்களும் சமய வழிபாட்டு நடவடிக்கைகளுக்காகத் திறக்க முடியும் என்று அரசாங்க தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
அதேபோல, ஆகக்கூடிய 50 பேர் சமய தலங்களில் ஒன்றுகூட அனுமதிக்கப்படுவார்கள். சுகாதார நெறிமுறைகளும் சமய தலங்களில் பின்பற்றப்பட வேண்டும் என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.