யாழ்ப்பாணத்தின் புகழ் பெற்ற நயினாதீவு நாகபூசணி அம்மன் ஆலயத்தின் வருடாந்த மஹோற்சவத்தின் போது சுகாதார ரீதியிலான கட்டுப்பாடுகளை பின்பற்றுவதற்கு...
யாழ்ப்பாணத்தின் புகழ் பெற்ற நயினாதீவு நாகபூசணி அம்மன் ஆலயத்தின் வருடாந்த மஹோற்சவத்தின் போது சுகாதார ரீதியிலான கட்டுப்பாடுகளை பின்பற்றுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
ஆலய நிர்வாக சபையினருடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது வருடாந்த மஹோற்சவம் தொடர்பில் சில இணக்கப்பாடுகள் எட்டப்பட்டதாக யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் தெரிவித்தார்.
இம்முறை நயினாதீவை தவிர்ந்த வௌியிடங்களில் இருந்துவரும் பக்தர்களுக்கு உற்சவத்தில் கலந்துகொள்வதற்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளதாக யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் இதன்போது குறிப்பிட்டார்.