ஓமந்தையின் துவரன்குளத்தில் 06 கிலோ 16 கிராம் கேரள கஞ்சாவுடன் ஒருவர் நேற்றைய தினம் கைது செய்யப்பட்டுள்ளார். செட்டிகுளம் பொலிஸ் விசேட அதிரடிப்...
ஓமந்தையின் துவரன்குளத்தில் 06 கிலோ 16 கிராம் கேரள கஞ்சாவுடன் ஒருவர் நேற்றைய தினம் கைது செய்யப்பட்டுள்ளார்.
செட்டிகுளம் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரும் ஓமந்தை பொலிஸாரும் இணைந்து மேற்கொண்ட சோதனை நடவடிக்கையின்போது, கேரள கஞ்சாவை தனது உடமையில் வைத்திருந்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளதாக, பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
ஓமந்தையைச் சேர்ந்த 29 வயதுடைய ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேகநபரை இன்று (17) வவுனியா நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.