சுமந்திரன் போராளிகள் மீது அக்கறை கொண்டுள்ளது போல நடிக்கிறாரென சுரேஷ் பிரேமச்சந்திரன் குற்றச்சாட்டு.

சுமந்திரன் போராளிகள் மீது அக்கறை கொண்டுள்ளது போல நடிக்கிறாரென சுரேஷ் பிரேமச்சந்திரன் குற்றச்சாட்டு.

தமிழீழ விடுதலைப் புலிகளின் போராளிகள் மீது சுமந்திரன் அக்கறை கொண்டுள்ளதாக தெரிவித்துள்ள கருத்துக்கள் அனைத்தும் பொய்யானவை. அவருடைய கட்சிக்காரர...

தமிழீழ விடுதலைப் புலிகளின் போராளிகள் மீது சுமந்திரன் அக்கறை கொண்டுள்ளதாக தெரிவித்துள்ள கருத்துக்கள் அனைத்தும் பொய்யானவை. அவருடைய கட்சிக்காரரே மறுதலிக்கும் அளவிற்கு கூச்சம் இல்லாமல் பொய் பேசி வருவது நிச்சயமாக ஏற்றுக் கொள்ளப்பட முடியாததென
ஈ.பி.ஆர்.எல் கட்சியின் தலைவர் சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

யாழ்.ஊடக அமையத்தில்  நண்பகல் நடந்த செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.இவ்விடயம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்:-


கடந்த சில வாரங்களுக்கு முன்பாக ஆயுதப் போராட்டத்தை ஏற்றுக் கொள்ளவில்லை, ஆயுதப் போராட்டத்தை நடத்திய தமிழீழ விடுதலைப் புலிகளினை ஏற்றுக் கொள்ளவில்லை என்று சாரப்பட பல்வேறுபட்ட கருத்துக்கள் சுமந்திரனால் கூறப்பட்டது.

இது குறித்த அவர் அங்கம் வகிக்கும் தமிழரசு கட்சியின் அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களும் அவருடைய கருத்திற்கு கண்டனம் தெரிவித்து பல அறிக்கைகளை வெளியிட்டதுடன், சுமந்திரன் தொடர்பாக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தலமைப்பீடத்தில் அழுத்தங்களை கொடுத்திருந்தார்கள்.

தமிழரசு கட்சி மட்டுமல்லாமல் தமிழ் தேசிய கூட்டமைப்பின் அங்கம் வகிக்கின்ற ரெலோ கட்சியின் தலைவர் செல்வம் அடைக்கலநாதனும் கடும் கண்டனங்களை தெரிவித்து, ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியிருந்தார்.

இந்த விவகாரங்களுக்கு பின்னர் யாழ்ப்பாணம் வந்த சுமந்திரன் பத்திரிகையாளர் சந்திப்பு ஒன்றை நடத்தியிருந்தார். அந்த சந்திப்பில் தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் பேராளிகளை கட்சியில் இணைத்து கொள்வது தொடர்பாக அழுத்தங்களை தான் கொடுத்ததாக தெரிவித்திருந்தார். தான் ஒருவன் மட்டும்தான் முன்னாள் போராளிகளை இணைக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்தாகவும் அவர் குறிப்பிட்டிருந்தார்.

இந்த விடயம் தொடர்பாக தமிழரசு கட்சியின் கொழும்பு கிளையில் செயலாளராக உள்ள சட்டத்தரணி தவரசா என்பவர் முன்னாள் போராளிகளை இணைப்பதற்கு தான் கோரிக்கை விடுத்ததாக சுமந்திரன் கூறுவது முழுமையான பொய் என்று தெளிவுபட கூறியுள்ளார்.

முன்னாள் போராளிகளை கட்சியில் இணைப்பது என்பது பொதுவான கருத்தாக இருந்தது, சுமந்திரன் தான் மட்டும்தான் அந்த கோரிக்கையை முன்வைத்தார் என்று சொல்வது முற்றிலும் பொய்யான தகவல் என்றும் தவராசா தனது கருத்தில் உறுதிபட தெரிவித்துள்ளார்.

பேராளிகளை இணைப்பது, இணைக்காமல் விடுவது தொடர்பில் தமிழரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜாவும் கூட வவுனியாவில் நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் தங்களுடன் ஜனநாயக போராளிகள் கட்சியினர் பேசியதாகவும், அவர்களை இணைப்பது தொடர்பில் தமிழரசு கட்சியிலும், கூட்டமைப்பின் பங்காளி கட்சிகளுடனும் பேசி அதற்கான முடிவு எடுக்கப்படும் என்று தெரிவித்திருந்தார்.

தேர்தல் நெருங்கும் சமயத்தில் போராளிகள் தொடர்பாகவும், அவர்களை கூட்டமைப்பில் இணைத்துக் கொள்வது தொடர்பாகவும், கட்சியின் தலைவரும், கூட்டமைப்பின் பேச்சாளரும் ஒவ்வொரு கருத்துக்களை கூறிவருவதை காணக்கூடியதக உள்ளது.

தேர்தலுக்காக நாங்கள் எல்லோரும் போராளிகளுக்காக செயற்படுகின்றோம் என்ற தொணியில் கருத்துக்களை வெளியிடுபதையும் எங்களால் காணக்கூடியதாக உள்ளது.
உண்மையாகவும் நேர்மையாகவும் பேராளிகளை அரசியலில் இணைத்துக் கொள்ளுகின்றார்களா? இல்லாவிட்டால் தேர்தலுக்காக போராளிகளில் கரிசனை உள்ளது போன்று காட்ட முயற்சிக்கின்றார்களா? என்பது முக்கியமான கேள்வியாக தற்போது எழுந்துள்ளது.

ஆயுதப் போராட்டத்தை ஏற்றுக் கொள்ளவில்லை என்று சொன்னவர்கள், ஆயுதம் தூக்கி போராடிய போராளிகளை எவ்வாறு கட்சியில் ஏற்றுக் கொள்வார்கள் என்பது ஒரு முரண்பாடனதும், எள்ளிநகையாடக்கூடிய கருத்துக்களாக உள்ளது.

சிங்கள ஊடகவியலாளரிடம் ஆயுதப் போராட்டத்தை ஏற்றுக் கொள்ளவில்லை என்று கூறிவிட்டு, இங்குவந்து போராளிகளை இணைக்கப்போவதாக முரண்பாடான கருத்தை கூறும் சுமந்திரன். வடக்கு கிழக்கை பிரதிநிதித்துவப்படுத்துகின்றோம், ஆகவே தமிழ் மக்கள் எங்களுக்கு இம்முறையும் வாக்களிக்க வேண்டும், நாங்கள் வந்தால்தான் எல்லாவற்றையும் சாதிப்போம் என்று கூறுகின்றார்.

இது தவிர கைதிகள் விடுதலை, காணி விடுவிப்பு, அபிவிருத்தி தொடர்பான விடயங்களையும் சுமந்திரன் கூறியுள்ளார். கைதிகள் விடுவிப்பு தொடர்பில் நான் சுமந்திரனிடம் ஒரு கேள்வியை கேட்கின்றேன்.

கைதிகள் சில பேர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்கள். சிலர் நீதிமன்றங்களில் பிரகாரம் விடுவிக்கப்பட்டுள்ளார்கள். சிலருக்கு தண்டனை வழங்கப்பட்டுள்ளது. மேலும் சிலருடைய வழக்குகள் இன்னமும் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது.
ஆகவே அரசியல் கைதிகளில் யாராவது ஒருவரை பாராளுமன்றத்தின் ஊடாகவோ அல்லது ஜனாதிபதி, பிரதமர் ஊடாகவோ பேசி, அந்த பேச்சுவார்த்தையூடாக இத்தனை அரசியல் கைதிகளை விடுவிக்கின்றோம் என்ற முடிவுக்கு வந்த எந்த ஒரு அரசியல் கைதியாவது விடுவிக்கப்பட்டாரா?
சட்டத்தரணிகளின் முயற்சியின் ஊடாக சிலர் பிணையில் விடுவிக்கப்படுவதும், சிலர் குற்றவாளிகளாக காணப்பட்டதுதான் நடந்து முடிந்திருக்கின்றதே தவிர சுமந்திரன் கூறுவது போல் தமிழ் தேசிய கூட்டமைப்பாலோ அல்லது அதன் தலமைத்துவத்தாலோ விடுவிக்கப்பட்டார்கள் என்ற விடயம் நடந்ததாக இல்லை.

அரசியல் கைதிகளுக்காக சில விடயங்களை சாதித்தோம் என்று சுமந்திரன் ஊடங்களின் முன் நின்று பொய் கூறுவது ஏற்றுக் கொள்ளப்பட முடியாத விடயம். இதே போன்றுதான் காணி விடுவிப்பும்.
வடக்கு மாகாணத்தில் எத்தனை ஏக்கர் காணிகள் தமிழ் தேசிய கூட்டமைப்பின் முயற்சியால் விடுவிக்கப்பட்டது? என்பதை சுமந்திரன் தெளிவுபடுத்த வேண்டும்.

இன்னும் ஆயிரக்கணக்காக ஏக்கர் காணிகள் இன்னமும் இராணுவத்தின் கட்டுப்பாட்டில்தான் உள்ளது. இதுதான் யதார்த்தம்.
அரசுடன் ஆதரவாக இருந்து செயற்பட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு என்ன விடயங்களை சாதித்துள்ளீர்கள் என்பதை அவர்கள் கூற வேண்டும்.
புதிய அரசியல்சாசனத்தை கொண்டுவர முடியாமலும், அரசியல் கைதிகளை விடுவிக்க முடியாமலும், காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பில் எந்த தீர்வும் இல்லாத நிலயில், நிலங்களை முழுவமையாக விடுவிக்க வைக்காத நிலையில் அரசிடம் இருந்து சில கோடிகளை பெற்றுக் கொண்டு வீதிகளை போட்டோம், கிணறுகளை திருத்தினோம், கோவில்களை கட்டினோம் என்று சொல்வது கூட்டமைப்பால் முடியும்.எத்தனை போருக்கு வேலைவாய்ப்பு கிடைத்தது. அரசுடன் இணைந்திருந்த 5 வருடத்தில் வேலைவாய்ப்புடன் கூடிய எந்த அபிவிருத்தி வடக்கில் செய்யப்பட்டது?
தேர்தலுக்காக முழுமையாக தமிழ் மக்களை ஏமாற்றக்கூடிய வகையில் அவருடைய கட்சியில் இருக்கின்றவர்களால் கண்டிக்கக் கூடிய விதத்தில் தொடர்ந்தும் கூச்சம் இல்லாமல் பெய்பேசி வருவது நிச்சயமாக ஏற்றுக் கொள்ளப்படமுடியாத விடயம். இதனை தமிழ் மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.


தமிழரசு கட்சிக்குள் தற்போது பல அணிகள் புரிந்து நிற்கின்றது. புலிகளை எதிர்ப்பவர்களும், புலிகளை ஆதரிப்பவர்களுமான கூட்டுக்களும் அந்த கட்சிக்குள் உருவெடுத்துள்ளது. இது தமது தேர்தல் வெற்றிகளை உறுதிப்படுத்தவும், தமக்கான விருப்பு வாக்கினை பெற்றுக் கொள்வதற்குமான பிரிவுகளாகவே உள்ளது.
ஒருவரை ஒருவர் தோற்கடிக்க வேண்டும் என்ற முனைப்புக்களே தமிழரசு கட்சிக்குள் இப்போது முன்னெழுந்துள்ளது என்றார். 

/fa-newspaper-o/ மேலும் பிரபலமான செய்திகள்$type=ticker$cate=2$count=8$va=0$i=1$cm=0$tb=rainbow

Name

Article,111,Astrology,30,cinema,255,doctor,13,Gallery,129,india,386,Jaffna,3317,lanka,8609,medical,7,Medicial,39,sports,347,swiss,15,technology,79,Trending,4212,Videos,10,World,575,Yarlexpress,4270,கவிதை,3,சமையல் குறிப்பு,3,பியர்,1,யாழ்ப்பாணம்,1,வணிகம் / பொருளாதாரம்,11,
ltr
item
Yarl Express: சுமந்திரன் போராளிகள் மீது அக்கறை கொண்டுள்ளது போல நடிக்கிறாரென சுரேஷ் பிரேமச்சந்திரன் குற்றச்சாட்டு.
சுமந்திரன் போராளிகள் மீது அக்கறை கொண்டுள்ளது போல நடிக்கிறாரென சுரேஷ் பிரேமச்சந்திரன் குற்றச்சாட்டு.
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjoaQ41MM8erVVpug0U4bQEN4WHQRPmvf-gORBH23NtAE1PJpI6Ze0AHdIroKpb8qWqdfOxbTV8E7H717_txZFz88-BM7zNWm6mKbSpvIAYH3rQ__Qbxoru9LWqeJfVUEqS0WO7qVr_8f0/s320/IMG_20200612_204457.jpg
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjoaQ41MM8erVVpug0U4bQEN4WHQRPmvf-gORBH23NtAE1PJpI6Ze0AHdIroKpb8qWqdfOxbTV8E7H717_txZFz88-BM7zNWm6mKbSpvIAYH3rQ__Qbxoru9LWqeJfVUEqS0WO7qVr_8f0/s72-c/IMG_20200612_204457.jpg
Yarl Express
https://www.yarlexpress.com/2020/06/blog-post_908.html
https://www.yarlexpress.com/
https://www.yarlexpress.com/
https://www.yarlexpress.com/2020/06/blog-post_908.html
true
2273553020617608170
UTF-8
Loaded All News எந்த செய்தியும் கிடைக்கவில்லை மேலும் செய்திகளையும் பார்க்க மேலும் வாசிக்க Reply Cancel reply Delete By Home PAGES POSTS View All உங்களுக்கு பரிந்துரைக்கப்படும் செய்திகள் LABEL ARCHIVE SEARCH ALL POSTS Not found any post match with your request Back Home Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS PREMIUM CONTENT IS LOCKED STEP 1: Share to a social network STEP 2: Click the link on your social network Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy Table of Content