நாட்டிலுள்ள தென்னை செய்கை மேற்கொள்ளப்பட்டுள்ள அனைத்து காணிகளையும் பதிவு செய்வது கட்டாயமென தென்னை பயிர்ச் செய்கை சபை அறிவித்துள்ளது. 1971 ஆம்...
நாட்டிலுள்ள தென்னை செய்கை மேற்கொள்ளப்பட்டுள்ள அனைத்து காணிகளையும் பதிவு செய்வது கட்டாயமென தென்னை பயிர்ச் செய்கை சபை அறிவித்துள்ளது.
1971 ஆம் ஆண்டின் 46ஆம் இலக்க தென்னை அபிவிருத்திச் சட்டத்தின் கீழ் தென்னங் காணிகளை இவ்வாறு பதிவு செய்வது கட்டாயம் என, சபை விடுத்துள்ள அறிவித்தலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய, இவ்வாறு பதிவு செய்யப்படும் தென்னங் காணிகளுக்கு மாத்திரமே, தென்னை பயிர்ச் செய்கை சபையினால் செயற்படுத்தப்படும் திட்டங்கள், சேவைகள், ஏனைய மானிய திட்டங்களுக்கு தகுதி பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டில் உள்ள தென்னங் காணிகள் தொடர்பான சரியான தரவுகளை பேணுதல், எதிர்கால அபவிருத்தித் திட்டங்களைத் தயாரித்தல், தென்னங் காணிகளின் உற்பத்தித்திறனை சரியான முறையில் கண்காணித்தல் மற்றும் தென்னங் காணிகளை பாதுகாத்தல் ஆகிய நோக்கத்திற்கு அமைய, தென்னை பயிர்ச் செய்கை சபையினால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் 011286101 எனும் தொலைபேசி இலக்கங்கள் ஊடாக தென்னை பயிர்ச் செய்கை சபையின் தகவல் பிரிவை அழைப்பதன் மூலம் அல்லது 1920 எனும் உடனடி அழைப்பு இலக்கத்தை அழைப்பதன் மூலம் மேலதிக தகவல்களை பெறலாம் என சபை அறிவித்துள்ளது.