யாழ்ப்பாணம் கொழும்புத்துறை பகுதியில் வாள் வைத்திருந்தனர் என்ற குற்றச்சாட்டில் இருவர் இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டு விசேட அதிரடிப்படையின...
யாழ்ப்பாணம் கொழும்புத்துறை பகுதியில் வாள் வைத்திருந்தனர் என்ற குற்றச்சாட்டில் இருவர் இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டு விசேட அதிரடிப்படையினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
இந்த சம்பவம் கொழும்புத்துறையில் இன்று நடைபெற்றுள்ளது.இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
யாழ்ப்பாணம் கொழும்புத்துறை பகுதியில் இராணுவத்தினர் மேற்கொண்ட சுற்றிவளைப்பு தேடுதலில் வீடு ஒன்றில் இருந்து வாள் ஒன்றினை மீட்டுள்ளனர்.
இதனையடுத்து இந்த சம்பவத்துடன் தொடர்புபட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தில் இருவரை கைது செய்துள்ளனர்.கைது செய்யப்படட சந்தேக நபர்களையும் மீட்கப்பட்டிருந்த வாளினையும் இராணுவத்தினர் விசேட அதிரடிப்படையினரிடம் ஒப்படைத்துள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் மேற்கொண்டுள்ளனர்.