பாடசாலை சீருடை கூப்பனுக்கு பதிலாக அடுத்த ஆண்டு முதல் பாடசாலை மாணவர்களுக்கு மீண்டும் இலவச சீருடைகளை வழங்க அரசு தீர்மானித்துள்ளது. கடந்த மைத்...
பாடசாலை சீருடை கூப்பனுக்கு பதிலாக அடுத்த ஆண்டு முதல் பாடசாலை மாணவர்களுக்கு மீண்டும் இலவச சீருடைகளை வழங்க அரசு தீர்மானித்துள்ளது.
கடந்த மைத்திரிபால அரசின் ஆட்சி காலத்தில் பாடசாலை சீருடை வழங்குவதற்கு பதிலாக சீருடை கூப்பன்களே வழங்கப்பட்டு வந்தது. சீருடை கூப்பன்களை கடைகளில் கொடுத்து பாடசாலை சீருடை துணிகளை பெற்றுக்கொள்ள முடியும்.
இந்நிலையில் அந்த முறையை மாற்றி மீண்டும் பழையபடி பாடசாலை சீருடை துணிகளை மாணவர்களுக்கு நேரடியாக வழங்குவதற்கு புதிய அரசு தீர்மானித்துள்ளது.