இன்று (16) யாழ் போதனா வைத்தியசாலையில் நடந்த பரிசோதனையில் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இன்றைய பரிசோதனையில் பூவரசங்குளம...
இன்று (16) யாழ் போதனா வைத்தியசாலையில் நடந்த பரிசோதனையில் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
இன்றைய பரிசோதனையில் பூவரசங்குளம் தனிமைப்படுத்தல் நிலையத்தைச் சேர்ந்த ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இன்று 116 பேருக்கான பரிசோதனைகள் யாழ் போதனா வைத்தியசாலை ஆய்வு கூடத்தில் மேற்கொள்ளப்பட்டன.
பரிசோதனைக்குட்பட்டவர்களின் விபரங்கள்
* போதனா வைத்தியசாலை விடுதிகளில் அனுமதிக்கப்பட்டவர்கள் - ஒருவர்
* போதனா வைத்தியசாலை வெளி நோயாளர் பிரிவில் பரிசோதிக்கப்பட்டவர்கள் - ஒருவர்
* விமானப்படையினர் தனிமைப்படுத்தல் மையம் முல்லைத்தீவு - 102 பேர்
* பொது வைத்தியசாலை வவுனியா - 2 பேர்
* பொது வைத்தியசாலை முல்லைத்தீவு - ஒருவர்
* பூவரசங்குளம் தனிமைப்படுத்தல் மையம் - 2 பேர்(ஒருவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது)
* முழங்காவில் தனிமைப்படுத்தல் மையம் - 3 பேர்