யாழ்ப்பாணம் இருபாலை தெற்கு ஞானவைரவர் கோயிலடி பிரதேச மக்களுக்காக 25 லட்சம் ரூபாய் செலவில் புதிதாக அமைக்கப்பட்ட குடிநீர் விநியோகத்திட்டம் இன்...
யாழ்ப்பாணம் இருபாலை தெற்கு ஞானவைரவர் கோயிலடி பிரதேச மக்களுக்காக 25 லட்சம் ரூபாய் செலவில் புதிதாக அமைக்கப்பட்ட குடிநீர் விநியோகத்திட்டம் இன்று அப் பகுதி மக்களிடம் கையளிக்கப்பட்டது.
கோப்பாய் பிரதேசசெயலர் பிரிவின் இருபாலை தெற்கு கிராமசேவையாளர் பிரிவுக்குட்பட்ட ஞானவைரவர்கோயிலடி கிராம மக்கள் குடிநீரை பெறுவதில் பெரும் அசெளகரியங்களை எதிர்கொண்டுவந்த நிலையில் இப்பகுதி மக்களின் குடிநீர் பிரச்சினையை தீர்ப்பதற்கு அப்பகுதி மக்களின்
பிரதேசசபை உறுப்பினர் நடேசபிள்ளை கஜேந்திரகுமார் அவர்கள் எடுத்த முயற்சியின் பயனாக சமூக நீர்வழங்கல் திணைக்களத்தின் 25 லட்சம் ரூபா நிதி ஒதுக்கீட்டில் இக் குடிநீர் திட்டம் அமைகப்பட்டது.
கடந்தவருடம் குடிநீர் விநியோகத்திட்ட வேலைகள் ஆரம்பிக்கப்பட்டு நீர்தாங்கிகள்,சுத்தீகரிப்பு நிலையங்கள் அமைக்கப்பட்டு அனைத்து பணிகளும் நிறைவு பெற்றிருந்ந நிலையில் அவ் குடிநீர் விநியோகத்திட்டம் மக்களிடம் கையளிக்கும் நிகழ்வு இன்று வெள்ளிக்கிழமை முற்பகல் 11 மணியளவில் நடைபெற்றது.
தேர்தல் திணைக்களம்,மாவட்ட அரசாங்க அதிபர்,பிரதேசசெயலர் ஆகியோரின் அனுமதியுடன் நடைபெற்ற இந்நிகழ்விற்கு பிரதேச நீர்ப்பாவணையாளர் சங்கத்தலைவர் பாக்கியராசா பிரதீபன் தலைமை தாங்கினார்.
சமூகநீர்வழங்கல் திணைக்கள மாகாணபொறியியலாளர் க.நிஜாந்தன் அவர்கள் கலந்து கொண்டு குடிநீர்விநியோகத்திட்டத்தை ஆரம்பித்துமக்களிடம் கையளித்தார்.
சமூகநீர்வழங்கல்திணைக்கள மாவட்ட பொறுப்பதிகாரி த.பிரசாந்,சமூக நீர்வழங்கல் திணைக்கள மாவட்ட அபிவிருத்தி உத்தியோகத்தர் அன்ரன் மற்றும் திணைக்கள உத்தியோகத்தர்கள்,ஞானஒளி சனசமூக நிலைய நிர்வாகத்தினர்,
பிரதேச மக்கள் எனப்பலரும் கலந்து கொண்டனர்.