பொதுத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் சிலரின் தேர்தல் விளம்பர பலகையில் தமது நிழற்படங்கள் பயன்படுத்தப்படுவதாக கொழும்பு பேராயர் மெல...
பொதுத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் சிலரின் தேர்தல் விளம்பர பலகையில் தமது நிழற்படங்கள் பயன்படுத்தப்படுவதாக கொழும்பு பேராயர் மெல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார்.
தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் தம்முடன் மேற்கொண்ட சந்திப்புக்களின் போது எடுக்கப்பட்ட நிழற்படங்களை பிரசார நடவடிக்கைகள் மற்றும் விளம்பர பலகையில் பயன்படுத்துவதாக தகவல்கள் கிடைக்கப்பெற்றுள்ளதாக கொழும்பு பேராயர் மெல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
தமது அனுமதியின்றி இவ்வாறான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதேவேளை அரசியில் ஈடுபடும் எண்ணம் தமக்கு கிடையாது எனவும் பேராயர் மெல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகை அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.