பருத்தித்துறை பகுதியில் சட்டவிரோதமான முறையில் போதைப்பொருட்கள் கடத்தப்படுவதாக விசேட அதிரடிப் படையினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் ...
பருத்தித்துறை பகுதியில் சட்டவிரோதமான முறையில் போதைப்பொருட்கள் கடத்தப்படுவதாக விசேட அதிரடிப் படையினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் விசேட அதிரடிப் படையினர் மேற்கொண்ட விசாரணையில் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அவரிடம் இருந்து கோடிக்கணக்கான பெறுமதியுடைய ஐஸ் போதைப்பொருளும் 25 கிலோ கஞ்சாவும் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த சம்பவம் தொடர்பில் விசேட அதிரடிப் படையினரும் போலீசாரும் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்