ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் யாழ் தேர்தல் மாவட்ட வேட்பாளர் பவதாரணி ராஜசிங்கம் நேற்றையதினம் யாழில் பல்வேறு மக்கள் சந்திப்புக்களில் கலந்...
ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் யாழ் தேர்தல் மாவட்ட வேட்பாளர் பவதாரணி ராஜசிங்கம் நேற்றையதினம் யாழில் பல்வேறு மக்கள் சந்திப்புக்களில் கலந்து கொண்டிருந்தனர்.
குறிப்பாக நவாலி, பிரான்பற்று, வடலியடைப்பு ஆகிய இடங்களிலுள்ள பெண்களை சந்தித்து அவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறித்தும் கேட்டறிந்து கொண்டார்.
இந்த மக்கள் சந்திப்பின் பேது நடக்க முடியாத நிலையில் அவதிப்பட்டுக் கொண்டிருந்த முதியவர் ஒருவரை கண்டு பவதாரணி அவருக்கு சக்கரவண்டி ஒன்றினையும், ஊன்றுகோல் ஒன்றினையும் வழங்கி வைத்திருந்தார்.
மேலும் நவாலியில் உள்ள முதியோர் பகல் நேர பாதுகாப்பு நிலையத்திற்கு சென்ற பவதாரணி முதியவர்களை மகிழ்விக்கும் வகையில், தாம் ஏற்பாடு செய்திருந்த மகிழ்வுறு நிகழ்விலும் பங்கேற்றிருந்தார்.