முன்னாள் முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன் தன்னிடம் மன்னிப்பு கேட்க வேண்டும். அவர் கொழும்பிலிருந்து வந்து தமது போராட்டத்தை கொச்சைப்படுத்துகிற...
முன்னாள் முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன் தன்னிடம் மன்னிப்பு கேட்க வேண்டும். அவர் கொழும்பிலிருந்து வந்து தமது போராட்டத்தை கொச்சைப்படுத்துகிறார் என தெரிவித்துள்ளார் பிரித்தானியாவிலிருந்து வந்து தேர்தலில் போட்டியிடும் கணேஸ் வேலாயுதம்.
மட்டக்களப்பில் உரையாற்றிய க.வி.விக்னேஸ்வரன், பிள்ளையான் அணியை ஆயுதக்குழு என விளித்து, அந்த ஆயுதக்குழுவால்தான் கிழக்கில் முஸ்லிம் குடியேற்றங்களை கட்டுப்படுத்தலாமென நினைக்க வேண்டாம் என குறிப்பிட்டதுடன், கிழக்கில் தேசிய கட்சி சார்பில் போட்டியிடும் அந்த ஆயுதக்குழுவிற்கு வாக்களிக்க வேண்டாம் என விக்னேஸ்வரன் தெரிவித்திரு்தார்.
அந்த உரையை சரியாக படிக்காமலோ அல்லது போதிய விளக்கமின்றியோ அவசரஅவசரமாக யாழ் ஊடக மையத்திற்கு வந்த கணேஸ் வேலாயுதம், பொங்கியெழுந்தார்.
ஆயுதப் போராட்டத்தில் ஈடுபட்ட இயக்கங்கள் பற்றி விக்னேஸ்வரன் எதுவும் தெரிவிக்காமல், அரச துணைக்குழுக்களாக இயங்கிய பிள்ளையான் அணி போன்ற சிறிய குழுக்களை பற்றி பேசியிருந்த நிலையில், கணேஸ் வேலாயுதம் நடத்திய செய்தியாளர் சந்திப்பில்-
விக்னேஸ்வரனின் அணியில் 4 ஆயுதகுழுக்கள் உள்ளன. அனந்தி தனது கணவரை வைத்தே அரசியல் செய்கிறார். அது தவிர, சிறிகாந்தா, சிவாஜிலிங்கம், சுரேஷ் போன்றவர்கள் அந்த அணியில் உள்ளனர். அந்த அணிக்குள் மோதல் ஆரம்பித்து விட்டதோ என எண்ண தோன்றுகிறது.
விக்னேஸ்வரனிற்கு சவால் விடுகிறேன். அவர் இதை சொல்ல தகுதியில்லை. ரணசிங்க பிரேமதாசவின் மேடைகளில் அவர் அரசியல் பிரச்சாரம் செய்தார் என தெரிவித்தார்.