தமிழ் மக்கள் தேணியக் கூட்டணியின் வேட்பாளர் சிறீக்காந்தாவின் சவாலையும் நிபந்தனைகளையும் ஏற்று எப்போது வேண்டுமானாலும் விவாதத்திற்குத் தயார் ...
தமிழ் மக்கள் தேணியக் கூட்டணியின் வேட்பாளர் சிறீக்காந்தாவின் சவாலையும் நிபந்தனைகளையும் ஏற்று எப்போது வேண்டுமானாலும் விவாதத்திற்குத் தயார் என கூட்டமைப்பின் வேட்பாளர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.
விவாதம் தொடர்பில் ஏற்கனவே சவாலிற்கு இருவரும் இணங்கிய நிலையில் அதற்கு சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக் கொடுப்பதற்கு ஓர் தொலைக்காட்சி நிறுவனம் இணக்கத்தை தெரிவித்துள்ளது. இதனால் இருவர் எனில் நானும் சுரேஸ் பிறேமச்சந்திரனும் வருவதாக சிறீகாந்தா தெரிவித்துள்ளார் அதற்கு ஊடகம் இணங்கினால் நானும் கூட்டமைப்புன் இன்னுமோர் வேட்பாளர் சகிதம் பங்குகொள்ளத் தயாராகவே இருக்கின்றேன்.
இருவர் பங்குகொள்ள முடியாது ஒருவர் என்றாலும் தயாராகவே உள்ளேன். எத்தனை பேர் என்றாலும் அந்த விவாதத்தினை ஓர் இரு நாட்களிற்குள் விரைவாகவே நடாத்த விரும்புகின்றேன் என்றார்.