சிறீலங்கா சுதந்திர கட்சியின் பெண்வேட்பாளரான பவதாரணி ராஜசிங்கம் நேற்றையதினம் சண்டிலிப்பாய், பண்டத்தரிப்பு ஆகிய பிரதேசங்களில் மக்கள் சந்திப்ப...
சிறீலங்கா சுதந்திர கட்சியின் பெண்வேட்பாளரான பவதாரணி ராஜசிங்கம் நேற்றையதினம் சண்டிலிப்பாய், பண்டத்தரிப்பு ஆகிய பிரதேசங்களில் மக்கள் சந்திப்பொன்றை நிகழ்த்தியிருந்தார்.
இதன்போது மக்கள் குறைகளை கேட்டறிந்து கொண்டதுடன் அவர்களிடமிருந்து எழுந்த வினாக்களுக்கும் அயராமல் பதிலளித்தார்.
சண்டிலிப்பாய் வடக்கு பிரதேசத்தின் விளையாட்டு கழகம் ஒன்றிற்கு சென்ற பவதாரணி ராஜசிங்கம் அங்குள்ள விளையாட்டு வீரர்களை சந்தித்து அவர்களுக்கு மின்சாதனங்கள் சிலவற்றை வழங்கினார். அத்துடன் வீரர்களின் ஆர்வத்தை அறிந்துகொண்டு விளையாட்டு துறைசாரந்த விடயங்களையும் முன்னிலைப்படுத்தி உரையாடினார்.
அதனைத்தொடர்ந்து பண்டத்தரிப்பு வாசிகசாலையில் மக்களை சந்தித்த அவர் ஏற்கனவே அரசியலால் சலித்துப்போன மக்களின் பேச்சுக்களை ஆறகேட்டு அவர்களுக்கான மாற்று சிந்தனைகளை முன்வைத்து தெரிவுகள் உங்களுடையது ஆனால் அது மிகச்சரியானதாக இருக்க வேண்டும் என்பதனை வலியுறுத்தினார்.