ஹீலங்கா சுதந்திர கட்சியின் பெண்வேட்பாளர் பவதாரணி ராஜசிங்கம் இன்று மருதங்கேணி, நாகர்கோவில் பிரதேசத்தில் வாழும் மக்களை சந்தித்து கலந்துரையாடி...
ஹீலங்கா சுதந்திர கட்சியின் பெண்வேட்பாளர் பவதாரணி ராஜசிங்கம் இன்று மருதங்கேணி, நாகர்கோவில் பிரதேசத்தில் வாழும் மக்களை சந்தித்து கலந்துரையாடினார் .
பெண்தலைமைத்துவ குடும்பங்கள் பெருமளவிலாக அப்பிரதேசத்தில் வாழ்ந்துவரும் நிலையில் பொருளாதார ரீதியாக அவர்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகளை மக்கள் முன்வைத்தனர். அத்துடன் பெருளவில் பெண்கள் வேலைக்கு செல்வதனால் அந்த குடும்பத்தில் உள்ள குழந்தை உரியவேளையில் ஆரம்பபாடசாலைக்கு செல்வது தொடர்பான பிரச்சனை இருப்பதாகவும் இதனால் பலர் கல்வியை இடைநிறுத்தியுள்ளதாகவும் தெரிவித்தனர்.
இதற்குப் பதிலளித்த பவதாரணி ராஜசிங்கம் கல்வி அவசியமானது. கற்றசமூகமே சிந்தனை தெளிவுடன் பயணிக்க முடியும்.
கல்வியை வேறு யாரும் எடுத்துக்கொள்ள முடியாது. ஆகவே கற்றல் அவசியமானது. அதனை எந்தவொரு காரணத்துக்காகவும் நிறுத்த வேண்டாம் என கேட்டுக்கொண்டார். அவர்களுக்கான வாழ்வாதார வசதிகளை உருவாக்க துணைநிற்பேன் என வாக்குறுதி அளித்தார். அத்துடன் இங்கே நான் உயர்கல்வி தளங்களுக்கு தமது பிள்ளைகளை அனுப்பி அழகுபார்த்த வீரபெண்மணிகளையும் அடையாளம் கண்டது மனதுக்கு நிறைவாய் உள்ளது எனவும் தெரிவித்தார்.
கல்வியை வேறு யாரும் எடுத்துக்கொள்ள முடியாது. ஆகவே கற்றல் அவசியமானது. அதனை எந்தவொரு காரணத்துக்காகவும் நிறுத்த வேண்டாம் என கேட்டுக்கொண்டார். அவர்களுக்கான வாழ்வாதார வசதிகளை உருவாக்க துணைநிற்பேன் என வாக்குறுதி அளித்தார். அத்துடன் இங்கே நான் உயர்கல்வி தளங்களுக்கு தமது பிள்ளைகளை அனுப்பி அழகுபார்த்த வீரபெண்மணிகளையும் அடையாளம் கண்டது மனதுக்கு நிறைவாய் உள்ளது எனவும் தெரிவித்தார்.
இதன்போது வெறும் வாக்குகளை பெறுவதல்ல எனது நோக்கம். நான் உங்களிடம் வருவது உங்களது குறைகளை கேட்டு அறிந்து கொண்டு அவற்றை நிவர்த்தி செய்வதற்கே. பெருமளவிலும் அடிப்படை வசதிசார்ந்த குறைபாடுகள் காணப்படுவதையே பல பிரதேச மக்களும் எடுத்துரைக்கின்றனர். ஆக தற்போதைய நிலையில் ஒன்றுபட்டு மக்கள் அனைவரும் கேட்பது அடிப்படை தேவைகள்.எனது வெற்றி தோல்வியை கடந்து நிச்சயம் நான் உங்கள் தேவைகளை செவிமடுத்து என்னால் முடிந்த உதவிகளை செய்வேன் என வாக்களித்தார்.