யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தின் கிளிநொச்சி வளாகம் கொரோனா அச்சம் காரணமாக முடக்கப்பட்டுள்ளது. குறித்த வளாகத்தின் தொழில்நுட்ப பீடத்தில் பய...
யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தின் கிளிநொச்சி வளாகம் கொரோனா அச்சம் காரணமாக முடக்கப்பட்டுள்ளது.
குறித்த வளாகத்தின் தொழில்நுட்ப பீடத்தில் பயின்றுவரும் மாணவி ஒருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.
மாணவியின் சகோதரர் கந்தக்காடு புனர்வாழ்வு நிலையத்தில் இராணுவ சிப்பாயாக இருந்து வருகிறார்.அவருக்கு தொற்று ஏற்பட்டுள்ளதை அடுத்து அண்மையில் பல்கலைக்கழகம் திரும்பிய குறித்த மாணவிக்கும் இத்தொற்று ஏற்பட்டிருக்கலாம் என்ற அச்சம் எழுந்துள்ளது.
இதன் காரணமாக கிளிநொச்சி வளாகம் முடக்கப்பட்டுள்ளது. யாரும் வளாகத்தில் உட்செல்லவோ, வெளியேறவோ தடை விதிக்கப்பட்டுள்ளது.