நாட்டில் முன்பள்ளிகளின் முக்கியத்துவத்தை உணர்ந்து ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, புதிய அரசு நிறுவப்பட்டதைத் தொடர்ந்து முன்பள்ளி முறைமை அமைச்சின...
நாட்டில் முன்பள்ளிகளின் முக்கியத்துவத்தை உணர்ந்து ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, புதிய அரசு நிறுவப்பட்டதைத் தொடர்ந்து முன்பள்ளி முறைமை அமைச்சின் கீழ் வைக்கப்படும் என தெரிவித்தமை பாராட்டப்பட வேண்டியதென தேசிய முன்பள்ளி ஆசிரியர் சங்கம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் தேசிய முன்பள்ளி ஆசிரியர் சங்க தலைவர் கலாநிதி ஜயலத் இளங்ககோன் , மற்றும் தேசிய முன்பள்ளி ஆசிரியர் சங்கத்தின் யாழ் கிளிநொச்சி ஒருங்கிணைப்பாளர் பவதாரணி ராஜசிங்கம் ஆகியோர் பாராட்டு தெரிவித்தனர்.
இது தொடர்பில் அவர்கள் மேலும் கருத்து தெரிவிக்கையில் இது வெற்றியின் முதல் களிப்பாய் கொண்டாடப்பட வேண்டியது.
தற்போதுள்ள பிரச்சினைகளை தீர்க்க எதிர்காலத்தில் முன்பள்ளி முறைமை அமைச்சின் கீழ் வைக்கப்படும் என்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அறிவித்துள்ளார்.
இதன் ஆரம்பகட்ட நடவடிக்கையாக, முன்பள்ளி ஆசிரியர்களுக்கு மாத சம்பளத்தை வழங்க அரசு ஏற்கனவே முடிவு செய்துள்ளது என்பதனை அவர் சுட்டிக்காட்டினார்.
இந்த முறையானது சகல பிரதேசத்திலுள்ள மாணவர்களும் ஒரேவகையான கற்றலை பெற்றுக்கொடுப்பதுடன் முன்பள்ளி ஆசிரியர் நலன் சார்ந்ததாகவும் அமைந்துள்ளது. எனது சிந்தனைப் பயணம் நேர்த்தியாய் நகர்வது நிறைவைத் தருகின்றது எனவும் தெரிவித்தார்.