யாழ்ப்பாணம் - பளை - வேம்படி உடத்துறை கடற்பகுதியில் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பின் போது 52 கிலோ 680 கிராம் கேரள கஞ்சா போதை பொருள் மீட்க...
யாழ்ப்பாணம் - பளை - வேம்படி உடத்துறை கடற்பகுதியில் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பின் போது 52 கிலோ 680 கிராம் கேரள கஞ்சா போதை பொருள் மீட்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாண காவல்துறை விசேட அதிரடி படையினர் மற்றும் காங்கேசன்துறை கடற்படையினர் இணைந்து முன்னெடுத்து சுற்றிவளைப்பில் இந்த கஞ்சா போதை பொருள் மீட்கப்பட்டுள்ளது.
காவல்துறையினருக்கு கிடைத்த இரகசிய தகவலுக்கமைய நேற்று இந்த சுற்றி வளைப்பு முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இதன்போது கேரளா கஞ்சா கடத்துவதற்கு பயன்படுத்தப்பட்ட படகு கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது.
சுற்றிவளைப்பின் போது சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர் தப்பி சென்றுள்ளதாக காவல்துறை ஊடகப்பபிரிவு அறிவித்துள்ளது.