எதிர்வரும் 36 மணித்தியாலத்தில் மேல், சபரகமுவ, மத்திய, வடக்கு, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்கள் மற்றும் திருகோணமலை, காலி, மாத்தறை மாவட்ட...
எதிர்வரும் 36 மணித்தியாலத்தில் மேல், சபரகமுவ, மத்திய, வடக்கு, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்கள் மற்றும் திருகோணமலை, காலி, மாத்தறை மாவட்டங்களில் கடும் மழை பொழிய கூடும் என வளிமண்டல திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
இதேவேளை மன்னாரில் இருந்து சிலாபம், கொழும்பு, காலி மற்றும் ஹம்பாந்தொட்டை ஊடாக பொத்துவில் வரையிலான கடற் பிரதேசங்களில் காற்றின் வேகம் அதிகரித்து வீச கூடு என்பதுடன் மீனவர்கள் மற்றும் கடற்படையினர் அவதானத்துடன் செயற்படுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.