நாடாளுமன்ற தேர்தலில் புத்தளம் மாவட்டத்தில் போட்டியிடும் வேட்பாளர் ஒருவர் போலியான வாக்குச்சீட்டுக்களை அச்சிட்டு விநியோகித்துள்ளதாக குற்றம் சு...
நாடாளுமன்ற தேர்தலில் புத்தளம் மாவட்டத்தில் போட்டியிடும் வேட்பாளர் ஒருவர் போலியான வாக்குச்சீட்டுக்களை அச்சிட்டு விநியோகித்துள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
தேர்தல் தொடர்பான வன்முறைகளை கண்காணிக்கும் நிலையம் இதனை சுட்டிக்காட்டியுள்ளது.
முஸ்லிம் தேசிய முன்னணியின் வேட்பாளர் ஒருவரே இந்த குற்றச்சாட்டுக்கு உள்ளாகியுள்ளார் என செய்திகள் தெரிவிக்கின்றன.
இந்த போலியான வாக்குசீட்டுக்களை கொண்டு எவ்வாறு வாக்களிப்பது என்பது தொடர்பில் அவர் வாக்காளர்களுக்கு விளக்கியுள்ளார் என கூறப்படுகிறது.