பாடசாலைகளை நடாத்துதல் தொடர்பாக நாடு முழுவதும் ஒரே நடைமுறை பின்பற்றப்பட வேண்டும் என இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கம் வலியுறுத்தல். மாணவர்...
பாடசாலைகளை நடாத்துதல் தொடர்பாக நாடு முழுவதும் ஒரே நடைமுறை பின்பற்றப்பட வேண்டும் என இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கம் வலியுறுத்தல்.
மாணவர்களின் கற்றல் நடவடிக்கைகளுக்கு பங்கம் ஏற்படாதவகையில் பாடசாலைகள் முகாமை செய்யப்பட வேண்டும். ஆசிரியர்கள் வழமையான கைவிரல் அடையாளமிடுதல், 7.30இல் இருந்து 3.30 வரை பாடசாலையில் இருத்தல் என்பன மத்திய கல்வி அமைச்சினால் கட்டாயமாக்கப் படவில்லை.
இதனை கிழக்கு மாகாணக் கல்விப்பணிப்பாளர் தெளிவாக அறிவித்துள்ளார். இதனை வடக்கு மாகாணமும் பின்பற்ற வேண்டும் என இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கம் வடமாமாகாணக் கல்விப் பணிப்பாளரிடம் எடுத்துரைத்துரைத்தபோது வடக்கு மாகாணத்திலும் அதே சுற்று நிருபமே நடைமுறையில் உள்ளதெனவும் சில அதிபர்களே அதனை உதாசீனம் செய்து நடந்து கொள்கின்றனர். எனவும் கூறியுள்ளார். அவ்வாறு நடந்துகொள்வோர்மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் கூறியுள்ளார்.