தேசியத்திரைப்படக் கூட்டுத்தாபனம் மற்றும் சஞ்சாரி இணையம் ஆகியவற்றின் கூட்டு இணைப்பில் கலைஞர்களுக்கான ஒன்றுகூடல் நிகழ்வு கடந்த சனிக்கிழமை ய...
தேசியத்திரைப்படக் கூட்டுத்தாபனம் மற்றும் சஞ்சாரி இணையம் ஆகியவற்றின் கூட்டு இணைப்பில் கலைஞர்களுக்கான ஒன்றுகூடல் நிகழ்வு கடந்த சனிக்கிழமை யாழ்ப்பாணத்திலுள்ள திண்ணை விடுதியில் நடைபெற்றது. இந் நிகழ்வில் கொழும்பு மற்றும் யாழ் மண்ணைச் சார்ந்த பல்வேறு கலைஞர்களும் பங்குபற்றியிருந்தனர். பாரம்பரிய கூத்துக்கலை வடிவத்தில் விருந்தினர்களை வரவேற்கப்பட்டனர்.
பெப்ரவரி மாதம் கொழும்பில் நடைபெற்ற கலைஞர்களுக்கான ஒன்றுகூடலைத் தொடர்ந்து யாழ்ப்பாணத்தில் உள்ள கலைஞர்களுடனான ஒன்றுகூடல் நிகழ்வு திட்டமிடப்பட்டது. கொரோனா வைரஸ் பரவலினால் ஏற்பட்ட இடையூறுகளினால் பிற்போடப்பட்டு கடந்த சனிக்கிழமை சிறப்புற நடைபெற்ற இந்நிகழ்வில் பல கலைஞர்களும் கலந்துகொண்டனர்.
இந்நிகழ்வில் நாடக கலைஞர்கள், இயக்குனர்கள்,ஒளிப்பதிவாளர்கள், படத்தொகுப்பாளர்கள், இசையமைப்பாளர்கள், பாடகர்கள், ஓவியர்,கூத்துக் கலைஞர்கள், மிருதங்க, தவில் வித்துவான்கள், நடிகர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள்,எழுத்தாளர்கள், நடன கலைஞர்கள் என பன்முகப்பட்ட கலைஞர்களும் இணைந்திருந்தனர்.
யாழ் கலைஞர்களுக்கான கெளரவமளிக்கும் வகையில் நிகழ்வு அமைந்திருந்தது அத்துடன் மூத்த கலைஞர்களான கண்ணன், வயலின் ஜெயராமன் மற்றும் இயக்குனர் குணபதி போன்றவர்களுடன் நாதஸ்வர தவில் வித்துவான்களான பஞ்சமூர்த்தி குமரன், முருகானந்தம், சிவதாசன்,துளசி, தட்சணாமூர்த்தி ஆகியோருடன் பலரும் பங்குகொண்டனர்.
அதனைத் தொடர்ந்து திரைப்பட இயக்குனர் கிங்ரட்ணம் கலைஞர்களின் வினாக்களை பெற்று நிகழ்வில் பங்குபற்றிய கொழும்பு கலைஞர்கள் மற்றும் திரைப்பட கூட்டுத்தாபனத்தினருடன் பகிர்ந்து கொண்டார்.
அந்த வகையில் இறுதியில் எழுப்பப்பட்ட வினாக்களுக்கான பதில்களை திரைப்படக் கூட்டுத்தாபனத்தினர் வழங்கினர்.