பொதுத்தேர்தலை முன்னிட்டு விசேட போக்குவரத்துத் திட்டம் நாளை முதல் ஆரம்பிக்கப்பட உள்ளது. போக்குவரத்து அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த வ...
போக்குவரத்து அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு மற்றும் அதனை அண்மித்துள்ள பகுதிகளில் தற்காலிகமாக தங்கியுள்ள வெளிமாவட்ட பிரஜைகள் தமது சொந்த ஊர்களுக்கு செல்வதற்காகவும் மற்றும் கொழும்பு நகருக்கு வருகைதரவுள்ள பொதுமக்களின் நன்மை கருதியும் இந்த விசேட போக்குவரத்து திட்டம் நடைமுறைப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய குறித்த திட்டம் நாளை முதல் எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 10 ஆம் திகதி வரை அமுல்படுத்தப்படவுள்ளதாக போக்குவரத்து அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
இதேவேளை குறித்த காலப்பகுதியில் விசேட ரயில் சேவைகளும் முன்னெடுக்கப்படவுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
இந்த விசேட ரயில்சேவை நாளை முதல் ஓகஸ்ட் மாதம் 3 ஆம் திகதி வரை முன்னெடுக்கப்படவுள்ளதாக ரயில்வே பொது முகாமையாளர் டிலந்த பெர்ணான்டோ தெரிவித்துள்ளார்.