தேர்தல் சட்டவிதி மீறல்கள் தொடர்பில் இதுவரை 5 ஆயிரத்து 73 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. ...
தேர்தல் சட்டவிதி மீறல்கள் தொடர்பில் இதுவரை 5 ஆயிரத்து 73 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
தேர்தல்கள் ஆணைக்குழு வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய தேசிய தேர்தல் முறைப்பாட்டு முகாமைத்துவ நிலையத்திற்கு 993 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.அத்துடன் மாவட்ட தேர்தல் முறைப்பாட்டு மத்திய நிலையத்திற்கு 4080 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் தேர்தல்கள் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.
எவ்வாறாயினும் இதுவரை தேர்தல் வன்முறை சம்பவங்கள் எவையும் பதிவு செய்யப்படவில்லை எனவும் தேர்தல்கள் ஆணைக்குழு வெளியிட்டுள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.