உரும்பிராய் பகுதியில் கஞ்சா போதைப் பொருளை உடைமையில் வைத்திருந்தார் என்ற குற்றச்சாட்டில் இளைஞர் ஒருவர் கோப்பாய் பொலிஸாரால் நேற்று மாலை கைத...
உரும்பிராய் பகுதியில் கஞ்சா போதைப் பொருளை உடைமையில் வைத்திருந்தார் என்ற குற்றச்சாட்டில் இளைஞர் ஒருவர் கோப்பாய் பொலிஸாரால் நேற்று மாலை கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
உரும்பிராய் பகுதியில் பொலிஸார் சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த போது சந்தேகத்துக்கிடமான இளைஞர் ஒருவரை பொலிஸார் சோதனையிட்டுள்ளனர்.
இதன் போது அவரிடமிருந்து 4 கிராம் கஞ்சா போதை பொருளை மீட்டதாக போலீசார் தெரிவித்தனர்.இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேக நபர் கோப்பாய் தெற்கு பகுதியைச் சேர்ந்த 28 வயதுடைய இளைஞர் என்று தெரிவிக்கப்படுகின்றது.
மேலும் உரும்பிராய் செல்வபுரம் பகுதியில் வைத்து “சாதா”என்ற போதைப்பொருளை வைத்திருந்தார் என்ற குற்றச்சாட்டில் பிறிதொரு இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார்.
--