தலைக்கவசம் இன்றி மோட்டார்சைக்கிளில் பயணிப்பது தவறா என்பது தனக்கு இதுவரை தெரியாது என்று கூறியுள்ளார் பொதுஜன பெரமுனவின் முன்னாள் நாடாளுமன்ற உற...
தலைக்கவசம் இன்றி மோட்டார்சைக்கிளில் பயணிப்பது தவறா என்பது தனக்கு இதுவரை தெரியாது என்று கூறியுள்ளார் பொதுஜன பெரமுனவின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சனத் நிஸாந்த.
இவர் புத்தளம் மாவட்டத்தில் இம்முறையும் பொதுத் தேர்தலில் போட்டியிடவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
அண்மையில் மோட்டார் சைக்கிளில் தனது ஆதரவாளர்களுடன் சென்ற அவர் தலைக்கவசமின்றியும், மோட்டார் சைக்கிள் இலக்கத்தகடு இன்றியும் வேகமாக சென்ற காணொளி பரபரப்பை ஏற்படுத்தியது.
இதுகுறித்து தேர்தல்கள் ஆணைக்குழுவிலும் முறைப்பாடு செய்யப்பட்டதோடு விசாரணைகளும் ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.