மன்னார் கடற்பரப்பில் மீன்பிடிக்கச் சென்ற கடற்றொழிலாளர்கள் மீது கடற்படையினர் தாக்குதல் மேற்கொண்டுள்ளதாக மன்னார் பொலிஸ் நிலையத்தில் முறைப்பா...
மன்னார் கடற்பரப்பில் மீன்பிடிக்கச் சென்ற கடற்றொழிலாளர்கள் மீது கடற்படையினர் தாக்குதல் மேற்கொண்டுள்ளதாக மன்னார் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.
மன்னார் பிரதான பாலத்திற்கு அருகில் இன்று காலை மீன் பிடிக்கச் சென்ற மீனவர்கள் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கூறியே, இவ்வாறு முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த நிலையில், தாம் பயணித்த படகை இடைமறித்து, சிவில் உடையில் இருந்த கடற்படையினர் பரிசீலினை செய்ய ஆவணங்களை கோரியதாகவும், ஆவணங்களை வழங்குவதற்கு முன்னரே கடற்படையினர் தம் மீது தாக்குல் மேற்கொண்டதாகவும் முறைப்பாட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அத்துடன், இந்த சம்பவத்தில் மீனவர் ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும், ஆவணங்களை பரிசீலனை செய்வதற்காகவே கடற்படையினர் முயன்றதாகவும், மீனவர்கள் மீது எந்தவொரு தாக்குதல்களும் மேற்கொள்ளப்படவில்லை எனவும் கடற்படை ஊடகப் பேச்சாளர் இசுர சூரியபண்டார தெரிவித்தார்.
எவ்வாறாயினும், இது தொடர்பில் விசாரணைகள் மேற்கொள்ளப்படுவதாகவும் அவர் மேலும் கூறினார்