அண்மையில் கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்ட வடமாகாண சபை முன்னாள் உறுப்பினர் சிவாஜிலிங்கத்தை மீண்டும் நீதிமன்றில் ஆஜராகுமாறு அறிவ...
அண்மையில் கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்ட வடமாகாண சபை முன்னாள் உறுப்பினர் சிவாஜிலிங்கத்தை மீண்டும் நீதிமன்றில் ஆஜராகுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.
நவாலி சென்.பீற்றர்ஸ் தேவாலய படுகொலை நினைவேந்தல் நிகழ்வில் தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் வேட்பாளர் எம்.கே.சிவாஜிலிங்கம் மற்றும் பொதுமக்கள் பங்கேற்க தடை விதிக்கக் கோரி மானிப்பாய் பொலிஸாரால் முன்வைக்கப்பட்ட விண்ணப்பம் தொடர்பில் மல்லாகம் நீதிமன்றில் நாளை முன்னிலையாகுமாறு அவருக்கு அழைப்புக் கட்டளை இன்று வழங்கப்பட்டுள்ளது.