ஆனல்ட் செய்த துரோகத்தால் மாவீரர் நாளில் சித்திரவதைக்குள்ளானேன்.
யாழ் மாநகரசபை முதல்வர் இமானுவேல் ஆனோல்ட் செய்த துரோகத்தால் 2011ஆம் ஆண்டு புலனாய்வாளர்களினால் சித்திரவதை செய்யப்பட்டேன் என பாதிக்கப்பட்ட தமிழ் செயற்பாட்டாளர் கவலை தெரிவித்தார் .
நேற்று திங்கட்கிழமை யாழ் ஊடக அமையத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
2011ஆம் ஆண்டு மாவீரர் நாளன்று இறுதி யுத்தத்தின்போது தாய் தந்தையை இழந்த பிள்ளைகளுக்கு ஆனோல்டினால் வழங்கப்பட்ட புத்தகப்பைகளை வழங்கும்போதே இலங்கை பாதுகாப்புத் தரப்பினரால் கைதுசெய்யப்பட்டேன்.
இவ்வாறு நான் கைது செய்யப்பட்டபோது எனக்கு புத்தகப் பைகளை வழங்கிய ஆனல்ட்டுக்கு தொலைபேசி எடுத்து என்னை காப்பாற்றுமாறு கூறமுயன்ற போதும் அவரதுதொலைபேசிகள் நிறுத்தப்பட்டது .
இவ்வாறு பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்ட என்னை தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தற்போதைய வேட்பாளரான விஸ்வலிங்கம் மணிவண்ணன் நேரடியாக தொடர்பு கொண்டு பணம் ஏதும் பெறாமல் வாதாடி என்னை மீட்டுத் தந்தார். இவ்வாறு துரோகத்தனமான செயல்களைச் செய்த ஆனோல்ட் தொடர்பில் மக்கள் விழிப்பாக இருக்க வேண்டுமென அவர் மேலும் தெரிவித்தார்.