தேசிய வீடமைப்பு அதிகார சபையினால் 14.8 மில்லியன் ரூபா நிதியில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட " புங்குடுதீவு வீட்டுத்திட்டம்" இன்றைய தி...
தேசிய வீடமைப்பு அதிகார சபையினால் 14.8 மில்லியன் ரூபா நிதியில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட " புங்குடுதீவு வீட்டுத்திட்டம்" இன்றைய தினம் பயனாளிகளிடம் கையளிக்கப்பட்டது.
வடமாகாண ஆளுநர் எஸ்.எம் சார்ள்ஸ் மற்றும் இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன், யாழ்.மாவட்ட கட்டளைத்தளபதி ரூவான் வணிகசூரிய உள்ளிட்டோர் பெயர்ப் பலகையை திரைநீக்கம் செய்ததுடன், வீடுகளை பயனாளிகளிடம் கையளித்தார்.
புங்குடுத்தீவு முதலாம் வட்டாரத்தில் காணி அற்ற வறிய குடும்பங்கள் தெரிவு செய்யப்பட்டு, 25 குடும்பங்களிற்கு 25 வீடுகள் புதிதாக அமைத்துக் கொடுக்கப்பட்டது.