மன ஆரோக்கியம் குன்றிய ஆசிரியர்கள் கல்வி கற்பிக்கும் வலயங்களாக யாழ் மற்றும் வலிகாம வலயம் இனம் காணப்பட்டுள்ளதாக அதிர்ச்சித் தகவல் வெளியாக...
மன ஆரோக்கியம் குன்றிய ஆசிரியர்கள் கல்வி கற்பிக்கும் வலயங்களாக யாழ் மற்றும் வலிகாம வலயம் இனம் காணப்பட்டுள்ளதாக அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது .
அண்மையில் கல்வி அமைச்சினால் வெளியிடப்பட்ட தகவலின் அடிப்படையில் இலங்கையில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் மன ஆரோக்கியம் குன்றிய ஆசிரியர்களாக இனங்காணப்பட்டுள்ள நிலையில் வடமாகாணத்தில் 180க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் மன ஆரோக்கியம் குன்றியவவர்களாக அடையாளப்படுத்தப் பட்டுள்ளனர்.
இவ் வகைப்படுத்தலில் யாழ் மற்றும் வலிகாமம் வலயங்களில் அதிகப்படியான ஆசிரியர்கள் உள்வாங்கப் பட்டுள்ளதாக அறியக்கிடைத்துள்ளதாக மருத்துவ அறிக்கைகள் மூலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கல்வி அமைச்சினால் வெளியிடப்பட்ட தகவலின் அடிப்படையில் குறித்த பாதிப்புக்குள்ளான ஆசிரியர்கள் தாமாகவே சுயவிருப்பின் பேரில் ஓய்வு பெறலாம் எனவும் அவ்வாறு ஓய்வுபெற மறுப்பவர்கள் கல்வி அமைச்சினால் நியமிக்கப்படும் மருத்துவ குழு முன் பரிசோதனைகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் பணிப்புரை வழங்கப்பட்டுள்ளதாக அறியவருகிறது.