மயிலிட்டி மீன்பிடித் துறைமுகம் தொடர்பில் உரிய தரப்பினரோ மக்கள் பிரதிநிதிகளாக இருந்தவர்களோ கவனத்தில் கொள்ளவில்லை என தமிழர் விடுதலை கூட்டணியி...
மயிலிட்டி மீன்பிடித் துறைமுகம் தொடர்பில் உரிய தரப்பினரோ மக்கள் பிரதிநிதிகளாக இருந்தவர்களோ கவனத்தில் கொள்ளவில்லை என தமிழர் விடுதலை கூட்டணியின் சிரேஷ்ட துணைத்தலைவர் சண்முகராஜா அரவிந்தன் தெரிவித்தார்.
நேற்று தமிழர் விடுதலைக் கூட்டணியின் சிரேஷ்ட துணைத்தலைவரும் வேட்பாளருமாகிய சண்முகராஜா அரவிந்தன் மற்றும் மதியாபரணம் மயூரன் அவர்களும் மயிலிட்டி மீன்பிடித் துறைமுகத்தை பார்வையிட்டனர்
மேலும் சண்முகராஜா அரவிந்தன் அவர்கள் குறிப்பிடுகின்ற போது நீண்ட நாட்களாக மக்களின் கோரிக்கைக்கு அமைய இவ் துறைமுகத்தை பார்வையிட நேர்ந்தது என தெரிவித்தார்.
இந்த துறைமுகமானது எமது மக்களின் இன்றைய தேவையை கருதி அமைக்கப்பட்டது. ஆனால் இங்கு தொழில் புரிபவர்கள் அனேகமானவர்கள் தெற்கில் இருப்பவர்கள். அது மாத்திரமன்றி இங்கு தொழில் புரியும் எமது தொழிலாளிகளுக்கு போதிய வசதிகளும் பயிற்சிகளும் காணாது உள்ளது. எனவே இது குறித்து மீன்பிடி அமைச்சோ, முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களோ எந்தவிதநடவடிக்கையும்