நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலுக்கான விஞ்ஞாபனத்தை நேற்றைய தினம் தமிழ் தேசிய மக்கள் முன்னணி திருகோணமலையில் வைத்து வெளியிட்டது. கட்சி பிர...
நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலுக்கான விஞ்ஞாபனத்தை நேற்றைய தினம் தமிழ் தேசிய மக்கள் முன்னணி திருகோணமலையில் வைத்து வெளியிட்டது.
கட்சி பிரமுகர்களின் பங்கேற்புடன் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி தனது தேர்தல் விஞ்ஞாபனத்தை வெளியிட்டது.
அரசியல் தீர்வு, ஐக்கிய நாடுகள் சபையிடம் பொதுவாக்கெடுப்பை கோருதல், இனவழிப்புக்கான நீதி பெறல், நிலையான அபிவிருத்தி, விவசாய அபிவிருத்தி , கைத்தொழில் அபிவிருத்தி, கலாச்சார அபிவிருத்தி, மீன்பிடித்துறை அபிவிருத்தி,
கல்வித்துறை அபிவிருத்தி, அரசியல் கைதிகள் விடுதலை, பயங்கரவாத தடைச்சட்ட நீக்கத்தின் அவசியம், வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருக்கான நீதி, புலம்பெயர் மக்களின் பங்களிப்புகள், தமிழக உறவுகளின் இணைவு, சர்வதேச சமூகத்தின் பொறுப்பு, மாற்றுத்தேவையுடோரின் தேவைகளை நிறைவேற்றல், கலை பண்பாடு விளையாட்டு துறை மேம்பாடுகள் உள்ளிட்ட பல விடயங்களை உள்ளடக்கியதாக தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் விஞ்ஞாபனம் அமைந்திருந்தது.