கொரோனா தொற்று சந்தேகம் காரணமாக தனிமைப்படுத்தப்பட்ட 76 பேரும் தற்போது விடுவிக்கப்பட்டுள்ளதாக வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் கேதீஸ்வர...
கொரோனா தொற்று சந்தேகம் காரணமாக தனிமைப்படுத்தப்பட்ட 76 பேரும் தற்போது விடுவிக்கப்பட்டுள்ளதாக வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் கேதீஸ்வரன் சற்று முன் தெரிவித்தார்.
யாழ் போதனா வைத்தியசாலை 7ஆம் இலக்க விடுதியில் சிகிச்சை பெற்ற ஒருவருக்கு கொரோனா உள்ளதாக தெரிவிக்கப்பட்டதையடுத்து அதனுடன் தொடர்புபட்டவர்கள் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில் 7ம் இலக்க விடுதியில் கொரோனா தொற்றுக்கு உள்ளான நபரை இரண்டாம் கட்டமாக கொழும்பில் வைத்து பி.சி.ஆர் பரிசோதனைக்கு உட்படுத்திய போதே அவருக்கு கொரோனா தொற்று இல்லையென உறுதி செய்யப்பட்டது.
இதனடிப்படையில் தனிமைப்படுத்தலுக்குட்பட்ட 76 பேரும் விடுவிக்கப்பட்டனர் என்றும் தெரிவித்தார்.