யாழ். போதனா வைத்தியசாலையில் இன்று சுத்திகரிப்புப் பணியில் ஈடுபட்டிருந்த பெண் ஊழியர் ஒருவர் நான்காம் மாடியிலிருந்து வீழ்ந்து உயிரிழந்துள்ளார்...
யாழ். போதனா வைத்தியசாலையில் இன்று சுத்திகரிப்புப் பணியில் ஈடுபட்டிருந்த பெண் ஊழியர் ஒருவர் நான்காம் மாடியிலிருந்து வீழ்ந்து உயிரிழந்துள்ளார்.![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjLVBnCLXoec1Vq9DUb4Np8dlCPgDv_xzKidPGr2ZaehjbITrCdtxIjIHh7-WziVkykGIbPSMzbLPsxyLKXTwKhNdjIobx_6ucWfHdpJ6bmpFgN4VbPQN32MY2liSxIIbUprLBxfA4xhFg/w640-h479/%25E0%25AE%25AF%25E0%25AE%25BE%25E0%25AE%25B4%25E0%25AF%258D+%25E0%25AE%25AA%25E0%25AF%258B%25E0%25AE%25A4%25E0%25AE%25A9%25E0%25AE%25BE.jpg)
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjLVBnCLXoec1Vq9DUb4Np8dlCPgDv_xzKidPGr2ZaehjbITrCdtxIjIHh7-WziVkykGIbPSMzbLPsxyLKXTwKhNdjIobx_6ucWfHdpJ6bmpFgN4VbPQN32MY2liSxIIbUprLBxfA4xhFg/w640-h479/%25E0%25AE%25AF%25E0%25AE%25BE%25E0%25AE%25B4%25E0%25AF%258D+%25E0%25AE%25AA%25E0%25AF%258B%25E0%25AE%25A4%25E0%25AE%25A9%25E0%25AE%25BE.jpg)
இந்நிலையில் குறித்த ஊழியர் தவறி வீழ்ந்தாரா? அல்லது தற்கொலை செய்தாரா? என்பது விசாரணைகளின் பின்னரே தெரிய வருமென யாழ். போதனா வைத்தியசாலை பணிப்பாளர் வைத்திய த.சத்தியமூர்த்தி தெரிவித்தார்.
இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
பளையைச் சேர்ந்த 40 வயதுடைய பெண் பணியாளரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் நான்காம் மாடியின் 17ஆம் நோயாளர் விடுதியிலிருந்தே குறித்தப் பெண் விழுந்து உயிரிழந்துள்ள நிலையில், இந்த சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாணம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.