கேரளாவில் கடந்த ஜூன் 1 ஆம் தேதி தொடங்கிய பருவமழை இடுக்கி, கோழிக்கோடு, கண்ணூர், காசர்கோடு, வயநாடு உள்ளிட்ட பல மாவட்டங்களில் கனமழையாக பெய்து...
கேரளாவில் கடந்த ஜூன் 1 ஆம் தேதி தொடங்கிய பருவமழை இடுக்கி, கோழிக்கோடு, கண்ணூர், காசர்கோடு, வயநாடு உள்ளிட்ட பல மாவட்டங்களில் கனமழையாக பெய்து வருகிறது.
கனமழை காரணமாக மூணாறு, ராஜமலை பகுதியில் கடந்த 7ஆம் தேதி பெரும் நிலச்சரிவு ஏற்பட்டது. இந்த நிலச்சரிவில் 40 குடும்பத்தை சேர்ந்த சுமார் 90க்கும் மேற்பட்டோர் சிக்கியிருக்கலாம் என கூறப்பட்டுள்ளது.
மேலும் நிலச்சரிவில் சிக்கி உள்ளவர்களில் பெரும்பாலானோர் தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு பகுதியை சேர்ந்தவர்கள் என கூறப்படுகிறது. இதை அடுத்து, போலீசாரும், தீயணைப்பு துறையினரும் சம்பவ இடத்தில் முகாமிட்டு மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
மேலும், தேசிய பேரிடர் மீட்பு குழுவினரும் உடனடியாக வரவழைக்கப்பட்டு, மண்ணுக்குள் புதையுண்டவர்களை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. மண்ணுக்குள் புதையுண்டவர்களுக்கு அவசர சிகிச்சை அளிக்கும் வகையில், அங்கு மருத்துவக் குழுவினரும் தயார் நிலையில் உள்ளனர்.
நேற்று வரை இங்கு 49 பேரின் உடல் மீட்கப்பட்ட நிலையில் இன்று 3 பேரின் உடல் அழுகிய நிலையில் மீட்கப்பட்டது. இதனால் பலி எண்ணிக்கை தற்போது 52 ஆக உயர்ந்துள்ளது. மூணாரில் அவ்வப்போது கடுமையான மழை பொழிவு இருப்பதால் மீட்பு பணிகளில் ஈடுபடுவோருக்கு சற்று சிரமம் ஏற்பட்டுள்ளது.