நாளை மறுநாள் நடைபெறவுள்ள பாராளுமன்றத் தேர்தலின் முன்னேற்பாடுகள் தொடர்பில் யாழ்ப்பாண தேர்தல் மாவட்டத்தில் போட்டியிடும் கட்சிகள் மற்றும் சுயேட...
நாளை மறுநாள் நடைபெறவுள்ள பாராளுமன்றத் தேர்தலின் முன்னேற்பாடுகள் தொடர்பில் யாழ்ப்பாண தேர்தல் மாவட்டத்தில் போட்டியிடும் கட்சிகள் மற்றும் சுயேட்சைக் குழுக்களின் பிரதி நிதிகளுக்கு தெளிவுபடுத்தும் கலந்துரையாடல் யாழ் மாவட்ட செயலகத்தில் இன்று இடம்பெற்றது.
யாழ் மாவட்டச் செயலர் க.மகேசன் தலைமையில் நடைபெற்றது. இந்த கலந்துரையாடலில் கட்சிகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.குறித்த கலந்துரையாடலில் நடைபெறவுள்ள பாராளுமன்றத் தேர்தலில் வாக்களிக்கும் முறை,வாக்கென்னும் முறை போன்றவை தொடர்பான தெளிவூட்டல்கள் வழங்கப்பட்டது.