யாழ்ப்பாணம் மற்றும் கொழும்பு இடையேயான புகையிரத சேவை மீண்டும் வழமைக்கு திரும்பியுள்ளதாக யாழ்ப்பாண புகையிரத நிலைய பிரதான அதிபர் பிரதீபன் தெர...
யாழ்ப்பாணம் மற்றும் கொழும்பு இடையேயான புகையிரத சேவை மீண்டும் வழமைக்கு திரும்பியுள்ளதாக யாழ்ப்பாண புகையிரத நிலைய பிரதான அதிபர் பிரதீபன் தெரிவித்தார்
கொரோனா காலத்தின் பின்னர் தற்போதுள்ள புகையிரதசேவை தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறுதெரிவித்தார்
கடந்த மார்ச் மாதம் முதல் நாட்டில் ஏற்பட்ட கொரோனா தொற்று அச்சம் காரணமாக யாழ்ப்பாணம் கொழும்பு புகையிரத சேவைகள் தடைப்பட்டிருந்த நிலையில் கடந்த மாதம் மீண்டும் புகையிரத சேவை ஆரம்பிக்கப்பட்டிருந்தது. தற்போது வழமைபோல் புகையிரத சேவைகள் இடம் பெற்று வருகின்றது என யாழ் புகையிரதநிலைய பிரதான அதிபர் பிரதீபன் தெரிவித்தார்.
தொடர்ந்து கருத்து தெரிவிக்கும் போது தற்போது இடைநிறுத்தப்பட்டுள்ள நகர் சேர் கடுகதி புகையிரதசேவை எதிர்வரும் 29 ,30 ,31 ,மற்றும் 1ம் திகதிகளில் பரீட்சார்த்தமான சேவையினை ஆரம்பிப்பதற்கு ரயில்வே திணைக்களம் தீர்மானித்துள்ளது
கொரோணா காலத்தில் இடைநிறுத்தப்பட்டிருந்த குறித்த சேவையானது எதிர்வரும் 29ஆம் திகதி முதல் பரீட்சார்த்தமாக ஆரம்பிக்கப்படவுள்ளது எனவே பயணிகள் தங்களுக்குரிய முன் ஆசன பதிவுகளை யாழ் புகையிரதநிலையத்தில் மேற்கொள்ள முடியும் என்றார்.