நாடாளுமன்றில் நேற்றைய தினம் தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் சி.வி.விக்னேஸ்வரன் ஆற்றிய உரையின் சில பகுதிகளை ஹான்சார்டில் இருந்து நீக்க ஐக்கிய ...
நாடாளுமன்றில் நேற்றைய தினம் தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் சி.வி.விக்னேஸ்வரன் ஆற்றிய உரையின் சில பகுதிகளை ஹான்சார்டில் இருந்து நீக்க ஐக்கிய மக்கள் சக்தி கோரிக்கை விடுத்துள்ளது.
“வடக்கு மற்றும் கிழக்கில் வாழும் மக்களுக்கு சுயநிர்ணய உரிமை உண்டு எனவே தமிழர்களின் உரிமைகளை அங்கீகரிக்க வேண்டும்” என விக்கி கூறியிருந்தார். இந்த நிலையில் இதனை பாராளுமன்ற ஹான்சார்டில் இருந்து நீக்க வேண்டும் என்று சஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தி கோரிக்கை விடுத்துள்ளது.