முன்னாள் ஜனாதிபதியும் சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவருமான மைத்திரிபால சிறிசேன, முன்னாள் அமைச்சர்கள் மகிந்த யாப்பா அபேவர்த்தன, சுசில் பி...
முன்னாள் ஜனாதிபதியும் சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவருமான மைத்திரிபால சிறிசேன, முன்னாள் அமைச்சர்கள் மகிந்த யாப்பா அபேவர்த்தன, சுசில் பிரேம ஜயந்த, அநுர பிரியதர்சன யாப்ப, ரஞ்சித் சியாம்பலபிட்டிய, விஜயதாச ராஜபக்ச மற்றும் மகிந்த சமரசிங்க ஆகியோருக்கே அமைச்சுப் பதவி வழங்கப்படவில்லை.
அதேவேளை, மட்டக்களப்பு நாடாளுமன்ற உறுப்பினர் சதாசிவம் வியாழேந்திரன், சிறிலங்கா பொதுஜனவில் போட்டியிட்டு வெற்றி பெற்றமையால் தபால் சேவைகள் மற்றும் பொதுஜன ஊடகத் தொழில் விருத்தி இராஜாங்க அமைச்சுப் பதவியைப் பெற்றுக்கொண்டுள்ளார்.
எனினும் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் சிறிலங்கா சுதந்திரக் கட்சியில் போட்டியிட்டு மாவட்டத்தில் அதிகூடிய விருப்பு வாக்குகளைப் பெற்ற அங்கஜன் இராமநாதனுக்கு அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சுப் பதவியோ இராஜாங்க அமைச்சுப் பதவியோ வழங்கப்படவில்லை.
இதேவேளை, மட்டக்களப்பு மாவட்டத்தில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற சிவநேசதுரை சந்திரகாந்தன் அல்லது பிள்ளையானுக்கு, மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர் பதவி வழங்கப்படவுள்ளது.
அவர் தற்போது சிறைச்சாலையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நிலையில் இன்றைய பதவியேற்பு விழாவில் பங்கேற்கவில்லை. அதனால் அவருக்கு அந்த நியமனம் வழங்கப்படவில்லை.