அவுஸ்திரேலிய பாதுகாப்பு திணைக்களத்திம் 23.4 மில்லியன் ரூபாய் பெறுமதியான சுகாதார உபகரணங்களை இலங்கை கடற்படைக்கு நன்கொடையாக வழங்கியுள்ளது. கொழு...
அவுஸ்திரேலிய பாதுகாப்பு திணைக்களத்திம் 23.4 மில்லியன் ரூபாய் பெறுமதியான சுகாதார உபகரணங்களை இலங்கை கடற்படைக்கு நன்கொடையாக வழங்கியுள்ளது.
கொழும்பில் அமைந்துள்ள அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகரின் உத்தியோகபூர்வ இல்லத்தில் வைத்து குறித்த பொருட்கள் வழங்கப்பட்டதோடு, இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் டேவிட் ஹோலி குறித்த நிகழ்வில் கலந்துகொண்டிருந்தார்.
இதன்போது இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகராலயத்தின் பாதுகாப்பு ஆலோசகர் ஊடாக குறித்த பொருட்கள் கடற்படைத் தளபதி அத்மிரல் நிஷாந்த உலுகேதென்னவிடம் கையளிக்கப்பட்டன.
கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில் 12 ஆயிரம் பாதுகாப்பு ஆடைகள் மற்றும் 2 இலட்சம் கையுறைகள் உள்ளிட்ட மேலும் பல சுகாதார உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டன.