அமைச்சரவை, கண்டி, பதவிப்பிரமாணம், கோட்டாபய ராஜபக்ஷ
வரலாற்றுச் சிறப்புமிக்க கண்டி ஶ்ரீ தலதா மாளிகையில் அமைந்துள்ள மாநாட்டு மண்டபத்தில் இந்த நிகழ்வு நடைபெறவுள்ளது.கண்டி ஶ்ரீ தலதா மாளிகையில் அமைந்துள்ள மாநாட்டு மண்டபத்தில் அமைச்சரவை பதவியேற்கும் முதலாவது சந்தர்ப்பம் இதுவாகும்.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் தலைமையில் இந்த நிகழ்வு இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், இந்த நிகழ்வில் சுகாதார நடைமுறைக்கு அமைய குறைந்த அளவிலானோரே பங்குபற்றவுள்ளதுடன், மதகுருமார்களின் பங்களிப்புடன் நடைபெறவும் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.
இந்த நிலையில், இன்றைய அமைச்சரவை பதவியேற்பு நிகழ்வில், 28 அமைச்சரவை அமைச்சர்கள் மற்றும் 40 இராஜாங்க அமைச்சர்கள் ஆகியோர் பதவியேற்கவுள்ளனர்.
இதற்கமைய, மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன், ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுன தலைமையிலான அரசாங்கம் ஆட்சி அமைத்துள்ளமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.