மாமனிதர் சசிகலா ரவிராஜ்க்கு ஆதரவாக வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரனின் தலைமையிலான தமிழ் மக்கள் தேசிய கூட்டணியினர் களமிறங்க...
மாமனிதர் சசிகலா ரவிராஜ்க்கு ஆதரவாக வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரனின் தலைமையிலான தமிழ் மக்கள் தேசிய கூட்டணியினர் களமிறங்கியுள்ளனர்.
இதன்படி இன்று சனிக்கிழமை காலை தென்மராட்சி பிரதேச செயலகத்திற்கு முன்பாக உள்ள மாமனிதர் ரவிராஜின் உருவச் சிலையடியில் நடந்த போராட்டத்திற்கு அக் கூட்டணியினர் சென்றுள்ளனர்.
அதன் பின்னர் எம்.கே.சிவாஜிலிங்கம் மற்றும் அனந்தி சசிதரன் ஆகியோர் சசிகலாவின் இல்லத்திற்கு சென்று கலந்துரையாடினர்.
விருப்பு வாக்கில் நடந்த குளறுபடி தொடர்பில் சட்ட நடவடிக்கை எடுக்கப்படுமாக இருந்தால் அதற்கு பரிபூரணமான ஒத்துழைப்பு வழங்க தயார் என்றும் அதற்கான ஏற்பாடுகளை இலவசமாக செய்ய முடியும் என்றும் சிவாஜிலிங்கம் சசிகலாவிடம் தெரிவித்தார்.