செஞ்சோலை படுகொலை, நினைவேந்தல், பொலிஸார், தடை
செஞ்சோலை படுகொலை நினைவேந்தல் இன்று அனுஷ்டிக்கப்படவிருந்த நிலையில் புதுக்குடியிருப்பு பொலிஸார் அதற்கு தடை விதித்துள்ளனர்.
14.08.2006அன்று செஞ்சோலையில் 54 பள்ளிசிறுமிகள் உட்பட 61 பேர் சிறிலங்கா வான்படையில் கொல்லப்பட்ட 14வது நினைவு தினம் இன்று அனுஸ்டிக்கப்படவுள்ள நிலையில், குறித்த நினைவேந்தலுக்கு தடை விதித்த புதுக்குடியிருப்பு பொலிஸார் நினைவேந்தல் நடைபெற்றால் கைது செய்வோம் எனவும் மிரட்டிச் சென்றுள்ளனர்.