நடைபெற்றுமுடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் 70 சதவீத வாக்குப் பதிவு இடம்பெற்றிருப்பதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவிக...
நடைபெற்றுமுடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் 70 சதவீத வாக்குப் பதிவு இடம்பெற்றிருப்பதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவிக்கின்றார்.
தேர்தல்கள் ஆணைக்குழு கட்டிடத் தொகுதியில் இன்று மாலை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இந்த தகவலை வெளியிட்டார்.
இதேவேளை நாளை காலை 7 மணிக்கு வாக்குகள் எண்ணும் பணிகள் ஆரம்பிக்கப்படும் என்றும் அவர் கூறினார்.
பொதுத் தேர்தல் 2020 - 5 மணியுடன் நிறைவடைந்த வாக்கு பதிவுகளுக்கு அமைய வாக்கு சதவீதங்கள் இவ்வாறு அமைந்தது.
கொழும்பு 61%
கம்பஹா 63%
களுத்துறை 61%
திகாமடுல்லை 68%
கண்டி 65%
அம்பாந்தோட்டை 67%
மொணராகலை 68%
கேகாலை 68%
குருநாகல் 60%
இரத்தினபுரி 70%
மாத்தளை 68%
மட்டக்களப்பு 69%
புத்தளம் 60%
காலி 62%
மாத்தறை 65 %
நுவரெலியா 75%
வன்னி 69 %
திருகோணமலை 69%
யாழ்ப்பாணம் 64 %
அநுராதபுரம் 52 %
பொலன்னறுவை 55%