சுன்னாகம், பொலிஸார், கட்டட கூலித்தொழிலாளி, யாழ் எக்ஸ்பிரஸ்
யாழ் சுன்னாகம் பொலிஸ் பிரிவிற்குட்டபட்ட சுன்னாகம் அம்பனைப் பகுதியில் வீடு திருத்த வேலையில் ஈடுபட்ட கட்டட கூலித்தொழிலாளி ஒருவர் கூரைத்தளத்தை உடைக்க முற்பட்ட வேளை சீமெந்திலான முகப்பு கூரை விழுந்ததில் உயிரிழந்துள்ளார்
நவாலி கலையரசி லேனை சேர்ந்த 42 வயதான அல்ரர் போல் என்கிற ஒரு பிள்ளையின் தந்தையே உயிரிழந்தவராவார்.
உயிரிழந்தவரின் சடலம் தற்போது தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. மேலதிக விசாரணைகளை சுன்னாகம் பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.