தங்கம், கடத்தல், யாழ் எக்ஸ்பிரஸ்
யாழ்ப்பாணத்தில் இருந்து இந்தியாவுக்கு சட்ட விரோதமான முறையில் கடல் மார்க்கமாக பெரும் தொகையான தங்கத்தை கடத்த முற்பட்ட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சுமார் 6 கோடியே 20 இலட்சம் ரூபா பெறுமதியான 5 கிலோ 500 கிராம் நிறையுடைய தங்கத்தை கடத்த முற்பட்ட போதே குறித்த இருவரும் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சந்தேக நபர்கள் இருவரும் இன்று அதிகாலை அனலைதீவு கடற்பரப்பில் வைத்துக் கைது செய்யப்பட்டதாக கடற்படையினர் தெரிவிக்கின்றனர்.
மாதகலை பகுதியைச் சேர்ந்த இருவரும் தரகுப் பணத்துக்காக இந்தியாவுக்கு தங்கம் கடத்த முற்பட்டதாக விசாரணைகளில் மூலம் தெரியவந்துள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
இந்த நிலையில், குறித்த சந்தேக நபர்கள் காங்கேசன்துறை கடற்படையினரால் விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட நிலையில், இருவரும் நீதிமன்ற நடவடிக்கைகளுக்காக யாழ்ப்பாணம் சுங்கத் திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்படவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
மேலும், மீட்கப்பட்ட 5 கிலோ 500 கிராம் தங்கம் சுங்கத் திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட உள்ளதாக கடற்படையினர் குறிப்பிட்டுள்ளனர்.