பொலிஸாருக்கும், ஐக்கிய தேசியக் கட்சியின் வேட்பாளர் ஒருவருக்கும் இடையே கடும் மோதல் இடம்பெற்ற சம்பவம் மத்துகம பிரதேசத்தில் இன்று பதிவாகியது. ஐ...
பொலிஸாருக்கும், ஐக்கிய தேசியக் கட்சியின் வேட்பாளர் ஒருவருக்கும் இடையே கடும் மோதல் இடம்பெற்ற சம்பவம் மத்துகம பிரதேசத்தில் இன்று பதிவாகியது.
ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பில் போட்டியிடும் முன்னாள் எம்.பி பாலித்த தெவரப்பெரும தனது ஆதரவாளர்களின் பட்டாளத்துடன் வாக்களிப்பதற்காக இன்று காலை வாகனப் பேரணியில் சென்றுள்ளார்.
இவர்களது வாகனப் பேரணியை பொலிஸார் இடைமறித்தநிலையில் அங்கு பதற்றநிலை ஏற்பட்டது.
சிறிதுநேரம் பொலிஸாருக்கும், தெவரப்பெருமவிற்கும் இடையே கடும் வாய்த்தர்க்கம் மூண்டது.
பொலிஸார் அங்கிருந்து கலைந்துசெல்ல முற்படுகையில் நடுவீதியில் நிறுத்தியிருந்த தனது ஜீப் வண்டியில் மேல் ஏறிய பாலித்த தெவரப்பெரும, பொலிஸார் மீது தகாத வார்த்தைக்கொண்டு விமர்சித்தார்.