முல்லைத்தீவு மாவட்டத்தின் மாவட்ட வைத்தியசாலையில் நிலவும் வைத்திய பற்றாக்குறை உள்ளிட்ட குறைபாடுகளை நிவர்த்தி செய்யுமாறு கோரி நாளை (17) காலை ஒ...
முல்லைத்தீவு மாவட்டத்தின் மாவட்ட வைத்தியசாலையில் நிலவும் வைத்திய பற்றாக்குறை உள்ளிட்ட குறைபாடுகளை நிவர்த்தி செய்யுமாறு கோரி நாளை (17) காலை ஒன்பது மணிக்கு மாபெரும் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று இடம்பெறவுள்ளது.
நாளை காலை 9 மணிக்கு முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலை முன்பாக போராட்டம் இடம்பெற உள்ளது. அத்துடன், நாளை முதல் தொடர்ச்சியாக தீர்வு கிடைக்கும் வரை சுழற்சி முறையில் போராட்டம் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது
பல்வேறு வகையிலும் பின்தங்கி காணப்படும் முல்லைத்தீவு மாவட்டத்தில் மாவட்ட வைத்தியசாலை சீராக இயங்காததால் மக்கள் தொடர்ச்சியாக எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு உரிய தீர்வுகள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளால் வழங்கப்படாததன் பின்னணியில் குறித்த போராட்டமானது நாளை முதல் தொடர் போராட்டமாக இடம்பெற உள்ளது.
எனவே நாளை காலை 9 மணிக்கு இடம்பெற இருக்கின்ற மாபெரும் கவனயீர்ப்பு போராட்டத்தில் முல்லைத்தீவு மாவட்டத்தின் பொதுமக்கள், வர்த்தக சங்கத்தினர், தனியார் போக்குவரத்து உரிமையாளர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரையும், சமூக ஆர்வலர்கள், நலன்விரும்பிகள் அனைவரையும் கலந்துகொண்டு மாவட்ட வைத்தியசாலையின் குறைபாடுகளை நிவர்த்தி செய்ய அழுத்தம் கொடுக்க ஒன்று திரளுமாறு ஏற்பாட்டுக் குழு அழைப்பு விடுத்துள்ளது.